பெரிய நோய்களை தடுக்கும் பெருங்காயத்தை சமையலில் பயன்படுத்துகிறீர்களா? இல்லையா?…

https://nannilamorganics.com/?product=pal-perungayam-asafoetida-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-50g

ருசிக்கு சாப்பிடுவதை விட ஆரோக்கியத்துக்கு சாப்பிடுவதுதான் சிறந்தது என்று நம் முன்னோர்கள் சமையலறையில் பயன்படுத்திய எல்லா பொருள்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அப்படி அவர்கள் ஆய்வு செய்த ஒவ்வொரு பொருளுமே ஆய்வாளர்களை ஆச்சரியத்துக் குள்ளாக்கியது. அப்படி உடல் ஆரோக்கியத்தை கொடுக்ககூடிய நோய்கள் வராமல் தடுக்ககூடிய பொருள்களில் பெருங்காயமும் ஒன்று. மணக்க மணக்க சமைத்தாலும் பெருங்காயம் சேர்த்தால் தான் ருசி கூடும் என்று சொல்வார்கள். ஆனால் அந்த பெருங்காயம் பெரிய ஆரோக்கியம் தரும் என்கிறது ஆய்வு.. என்னவென்று பார்க்கலாமா?

​ஆய்வு சொல்லும் பெருங்காய மணம் :

பெருங்காயம் குறித்து சித்த மருத்துவர் கு. சிவராமன் பேசியதை இத்தருணத்தில் குறிப்பிட வேண் டும். சாம்பாரில் இறுதியாக சேர்க்கப்படும் மணமூட்டியாக நினைத்துகொண்டிருக்கும் பெருங்கா யத்தை 1930 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் நியூயார்க் அருகில் ஒரு நிறுவனம் தொடங்கியிருக் கிறது. அப்போது வெளிநாட்டு மக்களும் பெருங்காயத்தை பயன்படுத்த தொடங்கியிருந்தார்கள். சிலருக்கு அதன் வாசனை ஒருவித கெட்டவாடையை உண்டு பண்ணவே அந்த நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவர்கள் பெருங்காயத்தை டெவில்ஸ் டங்க் (பிசாசுகளின் மலம்) என்ற பெயரையும் சொல்லி அழைத்தார்கள்.

அப்போது அங்கு ஃப்ளூ காய்ச்சல் ஒன்று பரவியது. அதற்கு ஸ்பானிஷ் ஃப்ளூ என்று வைத்திருந் தார்கள். இந்த வைரஸ் காய்ச்சல் தொற்று அங்கிருந்த மக்களுக்கு பரவியது. இக்காய்ச்சலின் தீவிரத்தால் சிலர் இறக்கவும் நேரிட்டது. அப்போது அந்நோய்க்கு மருந்து கண்டறியும் ஆராய்ச்சி யின் போது பெருங்காயம் இந்த நோயை விரட்டும் என்று கூறியது. அந்த ஆராய்ச்சிக்கு பிறகு எல்லா மக்களும் கடவுளின் மாமருந்து என்று பெயரிட்டு அழைக்க ஆரம்பித்தார்கள். இன்னும் சொல்ல போனால் அதை கழுத்தில் தாயத்து போல் கட்டி கொண்டு திரிந்தார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தாலே அவ்வபோது வந்து படுத்தும் காய்ச்சலை வராமல் தடுக்க உடலுக்கு தேவை வைரஸ் எதிர்க்கும் ஆற்றல். பெருங்காயத்தில் இருக்கும் லாக்டோ பாசில்ஸ் என்னும் நலம் பயக்கும் பாக்டீரியா இந்த ஆற்றலை தருகிறது. கால்சியம் சத்து தரும் பெருங்காயம் நரம்பு கோளாறுகளை நீக்குவதிலும் பயன்படுகிறது.

குறிப்பாக சிலருக்கு நெஞ்சு எலும்பு, முதுகு பக்கங்களில் வலியை உண்டாக்கும். இது வாயுவால் உண்டாகும் வலியாகவும் இருக்கலாம். இந்த எலும்பு பகுதியில் இருக்கும் வாயுவை விரட்டி பலம் சேர்க்கவும் பெருங்காயம் உதவுகிறது.

பெண்களுக்கு

https://nannilamorganics.com/?product=asafoetida-powder-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%b3%e0%af%8d-50g

மாதவிடாய் பிரச்சனை இருக்குன் பெண்கள் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துகொள்வது நல்லது. அதிக இரத்த போக்கு, இரத்த போக்கின்மை, ஒழுங்கற்ற மாதவிடாய், கருப்பையில் நீர் கட்டி போன்ற உபாதைகளை உண்டாக்காது. இவர்கள் தினசரி உணவில் பெருங்காயத்தை தவிர்க்காமல் சேர்க்க வேண்டும்.நமது முன்னோர்கள் பிரசவம் முடிந்த பெண்களுக்கு பூண்டுடன் பெருங்காயத் தை அதிகம் சேர்த்து காலையில் கொடுப்பார்கள். அப்படி கொடுத்தால் உதிரபோக்கு சீராகும் என்ப தோடு வயிற்றில் இருக்கும் அழுக்குகள் வெளியேறிவிடும்.

​சுவாசம் சீராகும்

பெருங்காயத்தில் இருக்கும் வேதிபொருள் நுரையீரல் சுவாசமண்டலம் வழியாக மார்புச்சளியை வெளியேற்றுகிறது. ஆஸ்துமா பிரச்சனையால் மூச்சு விட சிரமப்படுபவர்களுக்கு பெருங்காயத்தை எரிக்கும் புகை சுவாசத்தை சீராக்குகிறது. நெஞ்சு சளியை இயற்கையாக வெளியேற்றும் குணம் பெருங்காயத்துக்கு உண்டு.

ஆய்வு ஒன்றில் நுரையீரல் புற்றுநோய் செல்வளர்ச்சியை 50 % மேலாக கட்டுப்படுத்துவதை உறுதி செய்துள்ளது. நமது வீட்டு பெரியவர்கள் எதையும் சும்மா சொல்லி போகவில்லை. ஆன்மிகமாக இருந்தாலும், அடுங்கரையாக இருந்தாலும் எல்லாமே அறிவியலுடன் தொடர்பு கொண்டதே என் பதை ஆய்வுகளும் நிரூபித்துவருகிறது. இதை உணர்ந்துகொண்டால் ஆரோக்கியம் கண்டிப்பாக கிடைக்கும்.

இனி உங்கள் சமையலறையிலும் பெருங்காயம் மணக்கட்டும்..

அனைத்து விதமான இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டு தயாரிக்கும் பொருட்கள் கிடைக்கும். www.nannilamorganics.com

  • சமயம் ( THE TIMES OF INDIA)
Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
Open chat
Nannilam Organics
Nannilam Organics
Hi,
Welcome to Nannilam Organics